Thursday, 7 February 2013

இசைஞானியும் திமிரும்-

மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் சொல்வது..

"இந்த உலகத்தில் நேர்மையாய் இருப்பவர்களுக்கு திமிர்தான் வேலியே"

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..






குமுதத்தில் வெளிவரும் இசைஞானியுடனான கேள்விபதிலைக் கொண்டு அவரை திமிர் பிடித்தவன் என காரசாரமான விமர்சனங்க்ள் முன்வைக்கப் படும் இந்த வேளையில் முகநூல் நண்பர்
Venkata Swaminathan ன் Status Update இல், கமல்ஹாசன் படத்தில் வரும் ஒரு வசனம் கருத்தாக பதியப் பட்டிருந்தது. அந்தக் கருத்து ராஜாவைப் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கான பதிலாக எனக்குப் பட்டது. அதனால் அதை Share பண்ணியுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் பார்த்த ராஜாவின் நிகழ்ச்சியொன்றில், ராஜாவின் ஊரான பண்ணைபுரத்திலிருந்தே அவருடன் பழகிவரும் இயக்குனர் பாரதிராஜா பேசும் போது ராஜவிடம் உள்ள தலைக்கனத்தைப் பற்றி தனக்கு அபிப்பிராய பேதம் இருந்ததாகவும் ஆனால் அது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் போட்டி, பொறாமை நிறைந்த சினிமா உலகில் அவர் காணாமல் போயிருப்பார் என்பது இப்போ புரிகிறது என்றும் கூறி இருந்தார்.

சத்தியமான வார்த்தை. ஒரு விடயத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நேர்மையாளனாகக் காட்டவும், மற்றவர்களுக்கு ஏற்றமாதிரிப் பேசவும் வேண்டிய கட்டாயம் இசைஞானிக்கில்ல.. அவர் ஒரு அரசியல் தலைவரோ ஒரு நாட்டின் பிரதமரோ அல்ல. அவர் ஒரு இசைக்கலைஞர்.

உலக இசை வல்லுனர்களை அறிந்தவர்களுக்குப் புரியும், அது மைக்கேல் ஜாக்சனாக இருந்தாலும் சரி, பிறின்ஸ் ஆக இருந்தாலும் சரி.. அவர்களின் செயற்பாடு ஊக்க மாத்திரை எனும் Drugs சம்பந்தப் பட்டதாகவும், பாலியல் துஷ்பிரயோகங்கள் நிறைந்ததாகவும், ( பெரும்பான்மையானவர்கள் ) இருக்கிறது. இது இசைகலைஞர்களுக்கே உரித்தான ஒரு பொதுவான பலவீனமாக / குணாம்சமாகப் பார்க்கப் படுகிறது. தேவைக்கதிகமான புகழும், பணமும், ரசிக ரசிகைகள் செல்வாக்கும் ஏற்படும் போது அதிலிருந்து மீழ முடியாமல் திக்குமுக்காடி சின்னாபின்னமாகிறார்கள்.

தமிழகத்திலேயே இசைஞானியின் திறமையுடன் ஒப்பிட முடியாத ஒரு இசையமைப்பாளர், 85 களில் வைரமுத்துவுடன் சேர்ந்து மிகப் பெரிய சினிமா நிறுவனம் ரஜினியை வைத்தெடுத்த சில படங்களுக்கு இசையமைத்து அவை ஹிட்டானதால் திடீர் உச்சத்துக்கு போய் அந்தப் புகழ் போதையால் திக்குத்தெரியாமல் போயிருந்தார்.

ஆனால் அவை ஒன்றுக்கும் ஆட்படாமல், எந்தக் கிசுகிசுவுக்கும் உள்ளாகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைத்து எம்மையெல்லாம் பல தசாப்தங்களாக இசையெனும் இன்ப மழையால் நனைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி, எப்படிப் பேசுகிறார், எப்படிப்பதிலளிக்கிறார் என்பதல்ல முக்கியம். உலக அழவில் மற்றய இசைவல்லுனர்களோடு ஒப்பிடுகையில் இது அற்ப விடயம்.. அவர் இசையெனும் அந்தத் தெய்வீகத் தொழிலை ஒழுங்காகச் செய்துள்ளாரா என்பதுதான் முக்கியம். அவர் கிராமத்தில் இருந்து வந்த மனிதன். பல்கலைக் கல்விகளோ, காலேஜ் கல்விகளோ கற்று வந்து பேட்டி கொடுக்கவில்லை. அதனால் அவரின் பதில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற மாதிரித்தான் இருக்கும். அவரை இசை என்ற அதீத ஆற்றல் கொண்ட ஒரு சராசரி மனிதனாக, கிராமத்தானாக பார்ப்பவர்களுக்கு இதில் எந்த குழப்பங்களுமே ஏற்படாது. மாறாக அந்த வித்தகச் செருக்கைப் பார்த்து ரசிக்கத்தான் முடியும்.

இப்போ மீண்டும் அந்த வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள் :

மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் சொல்வது..

"இந்த உலகத்தில் நேர்மையாய் இருப்பவர்களுக்கு திமிர்தான் வேலியே"

இசைஞானிக்கு திமிர் வேலிமட்டுமல்ல , அவரைப் பாதுகாக்கும் அரண் , அது அவருக்கு அழகும் கூட.

No comments:

Post a Comment