திரும்ப திரும்ப அரைச்ச மாவையே அரைக்கும் சினிமாவை விட்டிட்டு கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது பாத்தால் என்ன?? எண்டு மனசு சொன்னதாலை சில வருஷங்களுக்கு முந்திப் பாத்து சிந்திக்க வைச்ச ஒரு ஆங்கில படத்தை தேடி எடுத்து இன்னுமொருக்காப் பாத்தன். அந்தப் படத்தை முதலிலை நான் பாத்தது 2009க்கு முதல் இப்ப பாக்கிறதுக்கும் அப்ப பாத்ததுக்கும் கனக்க வித்தியாசம் தெரிஞ்சிது. அந்தப் படத்தை 99ம் ஆண்டுக்கு முதலிலை பாக்கேக்கை எனக்கிருந்த மன முதிர்ச்சி, கண்டவை கேட்டவையால் பெற்ற அனுபவம், உலகத்தைப் பார்க்கும் பார்வை போன்ற காரணிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் இப்போ பாத்த போது அதே காரணிகள் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் நிரம்ப வித்தியாசம். இப்போ அந்தப் படத்தை மிக நன்றாக என்னால் புரிஞ்சுகொள்ள முடியுது. முதலில் பார்த்தபோது சினிமாவாக பார்த்த காட்சிகளில் இப்போ ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்து ஒன்றித்து திகைக்க முடியுது. அப்போது விறு விறுப்பில்லாமல் தொய்வாக சென்றகாட்சிகள் ஏன் அப்படி எடுக்கப் பட்டிருக்கிறது என்ற உண்மை இப்ப நல்ல வடிவாப் புரியுது. அந்தப் படத்தின்ரை பேர் “NO MAN LAND” யூகோஸ்லாவியா என்ற நாட்டுக்குள் இணைக்கப்பட்ட சேர்பிய பொஸ்னிய நாடுகள் தமக்குள்ளே அநெஇயாயத்துக்கு மோதிக் கொண்ட உள்நாட்ட்டுப் போர் சம்பந்தப் பட்ட ராணுவப் படம்.
நள்ளிரவில் நடந்து ரோந்து போகும் பொஸ்னியன் இராணுவம் கடும் பனிப்புகாருக்குள் அகப்படுகிறது. ஆளையாள் முகம் தெரியாத அழவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டதால் அதற்குமேல் ரோந்து போவது ஆபத்து என்பதை உனர்ந்து அந்தக் கடும் பனி இருட்டில் அவ்வளவு இராணுவத்தினரும் இளைப்பாறுகின்றனர். விடிந்து பனி விலகியவுடன் பார்த்த போதுதான் நிலைமையின் விபரீதம் புரிகிறது. அவர்கள் தமது எதிரியான சேர்பிய ராணுவத்துக்கு மிக அருகில் இருப்பதை உணர்வதுடன் சேர்பியரின் ஆக்ரோஷமான தாக்குதலையும் எதிர்கொண்டு ஒவ்வொருவராக இறக்கின்றனர். இறுதியில் சிலர் தப்பி “NO MAN LAND” ற்குள் ( போரில் ஈடுபட்டிருக்கும் இரு இராணுவத்தின் எல்லைகளுக்கும் இடைப்பட்ட பகுதி. இந்தப் பகுதி மனித நடமாட்டத்துக்கு தடைசெய்யப் பட்டிருக்கும். இரு இராணுவமும் மனித நடமாட்டம் தெரிந்தால் சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்துச்சுடும் துப்பாக்கியான Sniper உடன் 24 மணி நேரமும் கொலை வெறியுடன் காத்துக் கிடப்பர். ) பதுங்கி விடுகின்றனர். அவர்களை தேடி அழிப்பதற்காக சேர்பியா தனது ராணுவ வீரர்களை அனுப்புகிறது. அதில் ஒருவன் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் கொண்ட இளம் வீரன். அந்த சேர்பிய வீரனும், பொஸ்னிய வீரனும் எதிரெதிராக நேருக்கு நேராக சந்திக்கிறார்கள். அந்த மரணப் பொறியில் ஆயுதத்துடனும் சம பலத்துடனும் சந்தித்து மரணத்தின் விளிம்பில் நிற்கும்போது, அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் முறுகலையும் கருத்துப் பகிர்வையும், இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது இந்தப் படம். எந்த செக்கனிலும் எவருக்கும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையிலும், யாரால் யுத்தம் தொடங்கியது என்று இருவரும் தமக்கு சார்பாக வாக்குவாதப் படுவது யதார்த்தத்தின் உச்சக்கட்டம், அந்த இராணுவ வீரர்களின் உயிரை இரு பக்கத்தாருமே துச்சமாக மதிக்காமல் எகத்தாளமாக இருப்பது யுத்தத்தைப் பற்றிய தெளிவை பலருக்கு புரியவைக்கக் கூடும்
பொஸ்னியன் இயக்குனர் Danis Tanovic இன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் யூகோஸ்லாவியா என்ற நாட்டின் இருவேறு இனங்களிற்கிடையிலான யுத்தத்தைப் பற்றியது. கட்டாயத்தால் ஒன்றாக்கப் பட்ட பல்லின, பல முரண்பாடுகள் கொண்ட நாட்டில் பல்லாண்டுகாலமாக பரம வைரிகளாக இருக்கும் சேர்பிய இன இராணுவ வீரனும், அவர்களை வேற்று மனிதர்களாக, பரம வைரிகளாக கருதும் பொஸ்னிய இராணுவ (கிளர்ச்சிப்) படைவீரனினதும் மன உணர்வை பற்றியது., ,
சேர்பியாவுக்கும், பொஸ்னியாவுக்கும் இடையில் பகைமையை ஒழித்து பிரச்சினையை சுமுகமாக தீர்க்கப் போகிறோம் என்று உலகிற்கெல்லாம் பறைசாற்றிக்கொண்டு யூகோஸ்லாவியாவிற்குச் சென்ற ஐ.நாவின் அமைதிப்படையின் பொறுப்பற்ற தன்மையையும், அதன் தளபதியின் மிலேச்சாதிகாரத்தையும் இந்தப் படத்தில் பார்த்த போது உண்மையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. ஒரு பிரபல தொலைக்காட்சியின் போர் நிலவர செய்தியாளரின் வெளிப்பாட்டைப் பார்த்தபோது அமெரிக்க C.N.N. தொலைக்காட்சியின் யுத்தச் செய்தியாளராக இருந்து புகழ்பெற்ற பெண் நினைவுக்கு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.
யுத்தத்தை பற்றிய படங்களென்றால் ஹீரோயிசத்தையும், அக்க்ஷனையும் காட்டி பிரமையை ஏற்படுத்தும் என நினைத்துப்பார்ப்பவர்களுக்க
http://www.youtube.com/
இந்தப் படத்தைப் பற்றி இன்னும் எழுத ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன ஆனால் வேகமாகிவிட்ட இந்த உலகில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லலாம்.
இந்தப் படம் போரில் யார் வென்றார்கள், எப்படி வென்றார்கள் என்பதை காட்ட எடுக்கப் படவில்லை… மாறாக போரின் வடுக்களைக் காட்டவும், அதனால் குளிர்காய்பவரைத் தோலுரித்துக்காட்டவும் எடுக்கப் பட்டிருக்கிறது. யாருக்குப் புரியுமோ இல்லையோ ஈழத்தமிழனால் துல்லியமாகப் புரிந்துகொள்ளக் கூடிய படம் இது. இதுவரை பார்க்காதோர் கட்டாயம் பார்க்க வேண்டிய தரமான படம் இது. இப்படியான படங்கள் தமிழில் வந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்..??? வருமா??