ஆரம்பத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. , இடை நிலை ஆட்டக்காரரான அவரை இந்திய அணியின் கப்ரன்களும், நிர்வாகமும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கியதுதான் இதற்கான முக்கிய காரணமாக கிறிக்கற் விமர்சகர்களால் அது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஆரம்ப தடுமாற்றத்தினால் இந்திய அணியில் நிலையான வீரனாக அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
2000ம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரம் மீண்டும் உள்வாங்கப்பட்ட லக்ஸ்மன் அந்த சுற்றுப்பயணத்தில் சக வீரர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியாவின் வேகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் புற முதுகிட்ட வேளை அவர்களை நேருக்கு நேராய் எதிர்த்து நின்றதோடல்லாமல் உலக கிறிக்கற் வரலாற்றில் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்னையும் எதிர்த்து மிகச்சிறப்பாக விளையாடி சிட்னியில் தனது முதல் செஞ்சுரியை (167ரன்கள்) போட்டார். சர்வதேச ரெஸ்ற் கிறிக்கற் விளயாடத் தொடங்கி 33 வது இனிங்சிலேயே அவரால் செஞ்சரி போடக்கூடியதாக இருந்தது.
இந்த வெற்றிகரமான ஆட்டத்துக்கு பின், தன்னை நிரூபித்துவிட்டதாலோ என்னமோ , இவர் இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டு சபையிடம்,தன்னால் இனி தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்க முடியாது என கூறிவிட்டு ஹைதராபாத் சென்று, மீண்டும் தனது மாநிலத்துக்காக விளயாட ஆரம்பித்தார். இது உலக கிறிக்கற் ரசிகர்களை பொறுத்த வரை துரதிர்ஷ்டமே.
ஒருவாறாக ,ஒரு வருடத்துக்கு பின்பு ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டு மீண்டும் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டார். இதன் முக்கிய காரணம் மக்றா வார்னி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக சிட்னியில் அவர் போட்ட 167 ரன்கள் என்றால் அது மிகையல்ல.
அதுவரை இந்திய கிறிக்கற்றில் zero வாக இருந்த லக்ஸ்மன் நடக்கப் போகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பின் hero வாகப் போகிறார் ,என்பதோ கிறிக்கற்றின் சித்தாந்தத்தையே (theory) மாற்றப் போகிறார் என்பதையோ லக்ஸ்மன் உட்பட யாருமே நினைத்துப்பார்க்கவில்லை.
2001 februaryயில் 3 ரெஸ்ற் மற்றும் ஒரு நாள் தொடர்களை விளயாடாடுவதற்காக, இன்றுவரை உலகின் தலை சிறந்த கிறிக்கற் கப்ரன்களில் ஒருவரும், கிறிக்கற் உலகில் மிக மதிப்புக்குரியவருமான Steve Waugh தலைமையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சென்றது. இந்த பயணம் ஆஸ்திரேலியர்களுக்கு மிக முக்கியமானது என அவர்கள் கருதினார்கள் காரணம், தொடர்ந்து 15 ரெஸ்ற் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அவர்கள் இந்த 3 ரெஸ்ற் தொடரின் முதல் இரண்டையும் வெல்வார்களாயின் ஏற்கனவே அவர்களின் முன்னோர்களால் ( முன்னைய ஆஸ்திரேலிய அணி ) உருவாக்கப் பட்டிருந்த 16 ரெஸ்ற் போட்டிகளில் தொடர் வெற்றி, என்ற சாதனையை (Record) மீண்டும் தாமே முறியடித்து விடலாம் என்ற ஆசையாகும்.. இந்த வெற்றி, ஸ்டீவ் வோவ் வின் சரித்திரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் என்பதுடன், கிறிக்கற் அறிவு நிரம்பப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய மரியாதையை அவரின் மேல் எதிர்கால சந்ததிக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல் 1969ல் பில் லோறியின் தலைமையில் இந்தியா சென்று வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிறகு, எந்தவொரு ஆஸ்திரேலியக் கப்ரனும் இந்தியாவில் test series (தனி test போட்டிகளில் வென்றுள்ளார்கள்) இனை முழுமையாக வென்றதில்லை. எனவே அந்த வெளையில் உலகின் தலை சிறந்த பந்து வீச்சு இரட்டையர்களான (Shane warne) வார்னி மற்றும் (Mc grath )மக்றாவையும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களான லங்கர்,(Justin lager) பொன்ரிங் (Ricky ponting),ஹெய்டன் (Mathew hayden),மார்க் வாஹ், (Mark Waugh) போன்றவர்களை தனது அணியில் கொண்டிருந்த ஒரு கப்ரன் (steve
wagh) தன்னம்பிக்கயுடன் இருப்பது இயற்கையானதுதானே??
Border - Gavasker என்ற trophy க்காக நடாத்தப்பட்ட இந்தத் தொடரின் முதல் ரெஸ்ற் 27.2.2001 மும்பாயில் தொடங்கி ஆஸ்திரேலியாவால் 10 விக்கற்றுக்களால் இலகுவாக வெற்றிகொள்ளப்பட்டது. இந்த வெற்றி மூலம் தமது முன்னோர்களின் தொடர்ந்து 16 test match களில் வென்ற சாதனையை சமப்படுத்திய ஆஸ்திரேலியா, அந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையில் கொல்கொத்தா நோக்கி பயணமானார்கள். இந்த வெற்றிக்கு பிறகு Steve Waugh, தனது சுயசரிதையில் இப்படிக்கூறுகிறார். மும்பையில் பெற்ற வெற்றிக்கு பின்பு கல்கட்டாவில் எமது 2 வது ரெஸ்ற்ரிலும் இலகுவாக வென்றதும் அந்த வெற்றியை கொண்டாடி மகிழ்வதற்காக southern comfort ( அவுஸ்திரேலியர்கள் விரும்பிக்குடிக்கும் மதுபானம்) ரெடியாக இருந்தது.... இப்படி அவர் தனது அனுபவத்தையும், மிகவும் தன்னம்பிக்கையுடன் கொல்கத்தா வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதையும் விபரிக்கிறார்.

இந்தியாவின் கொல்கொத்தாவில் உள்ள கிறிக்கற் மைதானத்தின் பெயர் Eden garden. பல வருட பாரம்பரியம் நிறைந்த இந்த மைதானம் ஏறத்தாழ 95000 பார்வையாளர்களை தன்னகத்தே கொள்ளக் கூடியது. வெளிநாட்டு வீரர்களை தனது பாரம் பரியத்தாலும்,பிரமாண்டத்தாலும் மிகவும் கவர்ந்துள்ள இந்த மைதானத்தை இந்தியாவின் லோர்ட்ஸ் என steve waugh தனது புத்தகத்தில் வர்ணித்துள்ளார். இந்த மைதானத்திலே தான் வரலாற்றுச் சிறப்பும், கிறிக்கற் சரித்திரத்தில் மிகச்சிறந்த test match என கணிப்பிடப் பட்டுள்ளதுமான இரண்டாவது போட்டி நடந்தது.
11.3.2001 இல் தொடங்கிய அந்த ரெஸ்ற் போட்டி நூறு வருடங்களுக்கு மேல் விளையாடப்பட்டு வரும் இந்த விளயாட்டின் சித்தாந்தத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியது. புதிதாக உருவாகும் இளம் வீரர்கள், இந்த விளையாட்டை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பல லட்சம் மக்கள் பார்த்த அந்தப்போட்டி, இன்றுவரை பலகோடிப் பேரை கவரக்காரணமானது.. ஸ்ரிவ் வோவ்வின் கனவு பலித்ததா?? ஆஸ்திரேலியா தனது சாதனையை, தானே முறியடித்து அதை southern comfort டுடன் கொண்டாடினார்கள ?? !!! லக்ஸ்மன் அப்படி அங்கு என்ன தான் செய்தான் ??? தொடர்ந்து பார்ப்போம் ( stumps
day 2)
No comments:
Post a Comment