Thursday, 17 January 2013

லக்ஸ்மன் - கிறிக்கற்றின் சித்தாந்தத்தை உடைத்தெறிந்தவன், அவுஸ்திரேலியர்களின் சிம்ம சொப்பனம் - 2

லக்ஷ்மன் வெங்கிபுறப்பு வெங்கட் சாய் 1.11.74ல் ஆந்திராவின் ஹைதராபாத்தில் பிறந்தார். பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள்.தனது கல்வியை ஹைதராபாத்தில் மேற்கொண்ட அவர் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு இருந்தும் அதை புறந்தள்ளிவிட்டு தனது கனவான கிறிக்கற்றை தெரிவு செய்து, படிப்படியாக முன்னேறி 20.11.96ல் தனது முதல் ரெஸ்ற் போட்டியை தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஆரம்பித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டியை 9.4.98ல் சிம்பாப்வேக்கு எதிராகத் தொடங்கினார். இவர் தனது முன்மாதிரியாகவும், கனவு நாயகனாகவும் ஏற்றுக்கொண்டது முன்னாள் இந்திய கப்ரனும், ஆந்திராக்காரருமாகிய மொஹமட் அசாருதீனை ஆகும்.

ஆரம்பத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. , இடை நிலை ஆட்டக்காரரான அவரை இந்திய அணியின் கப்ரன்களும், நிர்வாகமும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கியதுதான் இதற்கான முக்கிய காரணமாக கிறிக்கற் விமர்சகர்களால் அது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஆரம்ப தடுமாற்றத்தினால் இந்திய அணியில் நிலையான வீரனாக அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
2000ம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரம் மீண்டும் உள்வாங்கப்பட்ட லக்ஸ்மன் அந்த சுற்றுப்பயணத்தில் சக வீரர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியாவின் வேகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் புற முதுகிட்ட வேளை அவர்களை நேருக்கு நேராய் எதிர்த்து நின்றதோடல்லாமல் உலக கிறிக்கற் வரலாற்றில் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்னையும் எதிர்த்து மிகச்சிறப்பாக விளையாடி சிட்னியில் தனது முதல் செஞ்சுரியை (167ரன்கள்) போட்டார். சர்வதேச ரெஸ்ற் கிறிக்கற் விளயாடத் தொடங்கி 33 வது இனிங்சிலேயே அவரால் செஞ்சரி போடக்கூடியதாக இருந்தது.

இந்த வெற்றிகரமான ஆட்டத்துக்கு பின், தன்னை நிரூபித்துவிட்டதாலோ என்னமோ , இவர் இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டு சபையிடம்,தன்னால் இனி தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்க முடியாது என கூறிவிட்டு ஹைதராபாத் சென்று, மீண்டும் தனது மாநிலத்துக்காக விளயாட ஆரம்பித்தார். இது உலக கிறிக்கற் ரசிகர்களை பொறுத்த வரை துரதிர்ஷ்டமே.

ஒருவாறாக ,ஒரு வருடத்துக்கு பின்பு ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டு மீண்டும் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டார். இதன் முக்கிய காரணம் மக்றா வார்னி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக சிட்னியில் அவர் போட்ட 167 ரன்கள் என்றால் அது மிகையல்ல.

அதுவரை இந்திய கிறிக்கற்றில் zero வாக இருந்த லக்ஸ்மன் நடக்கப் போகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பின் hero வாகப் போகிறார் ,என்பதோ கிறிக்கற்றின் சித்தாந்தத்தையே (theory) மாற்றப் போகிறார் என்பதையோ லக்ஸ்மன் உட்பட யாருமே நினைத்துப்பார்க்கவில்லை.

2001 februaryயில் 3 ரெஸ்ற் மற்றும் ஒரு நாள் தொடர்களை விளயாடாடுவதற்காக, இன்றுவரை உலகின் தலை சிறந்த கிறிக்கற் கப்ரன்களில் ஒருவரும், கிறிக்கற் உலகில் மிக மதிப்புக்குரியவருமான Steve Waugh தலைமையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சென்றது. இந்த பயணம் ஆஸ்திரேலியர்களுக்கு மிக முக்கியமானது என அவர்கள் கருதினார்கள் காரணம், தொடர்ந்து 15 ரெஸ்ற் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அவர்கள் இந்த 3 ரெஸ்ற் தொடரின் முதல் இரண்டையும் வெல்வார்களாயின் ஏற்கனவே அவர்களின் முன்னோர்களால் ( முன்னைய ஆஸ்திரேலிய அணி ) உருவாக்கப் பட்டிருந்த 16 ரெஸ்ற் போட்டிகளில் தொடர் வெற்றி, என்ற சாதனையை (Record) மீண்டும் தாமே முறியடித்து விடலாம் என்ற ஆசையாகும்.. இந்த வெற்றி, ஸ்டீவ் வோவ் வின் சரித்திரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் என்பதுடன், கிறிக்கற் அறிவு நிரம்பப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய மரியாதையை அவரின் மேல் எதிர்கால சந்ததிக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல் 1969ல் பில் லோறியின் தலைமையில் இந்தியா சென்று வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிறகு, எந்தவொரு ஆஸ்திரேலியக் கப்ரனும் இந்தியாவில் test series (தனி test போட்டிகளில் வென்றுள்ளார்கள்) இனை முழுமையாக வென்றதில்லை. எனவே அந்த வெளையில் உலகின் தலை சிறந்த பந்து வீச்சு இரட்டையர்களான (Shane warne) வார்னி மற்றும் (Mc grath )மக்றாவையும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களான லங்கர்,(Justin lager) பொன்ரிங் (Ricky ponting),ஹெய்டன் (Mathew hayden),மார்க் வாஹ், (Mark Waugh) போன்றவர்களை தனது அணியில் கொண்டிருந்த ஒரு கப்ரன் (steve
wagh) தன்னம்பிக்கயுடன் இருப்பது இயற்கையானதுதானே??

Border - Gavasker என்ற trophy க்காக நடாத்தப்பட்ட இந்தத் தொடரின் முதல் ரெஸ்ற் 27.2.2001 மும்பாயில் தொடங்கி ஆஸ்திரேலியாவால் 10 விக்கற்றுக்களால் இலகுவாக வெற்றிகொள்ளப்பட்டது. இந்த வெற்றி மூலம் தமது முன்னோர்களின் தொடர்ந்து 16 test match களில் வென்ற சாதனையை சமப்படுத்திய ஆஸ்திரேலியா, அந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையில் கொல்கொத்தா நோக்கி பயணமானார்கள். இந்த வெற்றிக்கு பிறகு Steve Waugh, தனது சுயசரிதையில் இப்படிக்கூறுகிறார். மும்பையில் பெற்ற வெற்றிக்கு பின்பு கல்கட்டாவில் எமது 2 வது ரெஸ்ற்ரிலும் இலகுவாக வென்றதும் அந்த வெற்றியை கொண்டாடி மகிழ்வதற்காக southern comfort ( அவுஸ்திரேலியர்கள் விரும்பிக்குடிக்கும் மதுபானம்) ரெடியாக இருந்தது.... இப்படி அவர் தனது அனுபவத்தையும், மிகவும் தன்னம்பிக்கையுடன் கொல்கத்தா வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதையும் விபரிக்கிறார்.








Photo: V.V.S.லக்க்ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம்கிறிக்கற்றின் சித்தாந்தத்தை (Theory) உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் புரியாத புதிர் - 3

11.3.2001 கொல்கொத்தா EDEN GARDENல் 3 வது ரெஸ்ற் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கு அம்பயர்களாக இந்தியாவை சேர்ந்த எஸ்.கே. Pansal இங்கிலாந்தை சேர்ந்த பி.wills சும் பணியாற்றினார்கள். மூம்பாயில் நடந்த முதல் test ல் இந்தியா படு தோல்வியடைந்திருந்தாலும்,EDEN GARDEN ல் கூட்டம் நிரம்பத்தொடங்கியது. கொல்கத்தாவில் கங்குலியின் செல்வாக்கு, STEVE WA
UGH கல்கத்தாவிலுள்ள உதயன் என்ற ஆதரவற்ற அமைப்பின் மேல் காட்டிவந்த பரிவும் உதவிகளும், மற்றும் ஆஸ்திரேலியா 17 வது வெற்றியை பெற்று இந்தியாவில் சாதனையை நிலைநாட்டுவார்களா??? அல்லது இந்திய வீரர்கள் தொடரும் ஆஸ்திரேலியர்களின் சாதனையை முறியடிப்பார்களா?? போன்ற ஆர்வக் கோளாறுகளுடன் , கொல்கத்தா வாசிகளுக்கு இயல்பிலேயே கிறிக்கற்றின் மேலுள்ள வெறித்தனமான காதலையும் இதற்கான காரணங்களாகக் கொள்ளலாம்,

நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடத்தொடங்கியது. இதில் STEVE WAGH 110 ரன்களும், MATHEW HEYDEN 97 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினார்கள். இதில் முக்கியமானது கடைசி விக்கற்றான JASON GILLESPIE STEVE WAUGH வும் கூட்டுச் சேர்ந்து 133 ரன்கள் எடுத்ததுதான். இறுதியில் ஆஸ்திரேலியா எல்லா விக்கட்டுக்களையும் இழந்து 445 ரன்களை எடுத்திருந்தது. உண்மையில் eden gardenல் இந்த எண்ணிக்கையான ரன்களை முதலில் எடுக்கும் அணி அதை வெற்றி எண்ணிக்கை என்றே கொள்வார்கள். இந்தியாவின் பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 7 விக்கட்டுக்களை எடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியர்களின் வேகப் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக விக்கட்டுக்களை இழக்கத்தொடங்கியது. இதில் ஆறாவது வீரனாக களமிறங்கிய லக்ஸ்மன் மட்டும் 122 நிமிடங்கள் விளையாடி 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் விஷேடம் என்னவென்றால் 48 (12@4) ரன்களை boundry யாக அவர் எடுத்திருந்ததுதான். இதைப்பற்றி STEVE WAUGH தனது நூலில் ,இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஆறாவது துடுப்பாட்ட வீரனாக களமிறங்கிய laxman Out of foam மில் இருந்தார்.அந்த வேளையில் இந்திய அணியில் நிரந்தரமான வீரராக இடம்பிடிப்பதற்கு மிகவும் போராடிய லக்ஸ்மனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் test ராக அந்த போட்டி இருந்தது.. லக்ஸ்மன் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சக வீரராகவும் இந்திய அணியின் இறுதி வீரருமாக விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாத் Gillespieயின் ஒரு பந்துக்கு clean L.B.W. ஆனால் அம்பயரின் பிழையான தீர்ப்பால் அவருக்கு அவுட் கொடுபடவில்லை. இதனால் லாபம் அடைந்தவர் லக்ஸ்மனே, ஏனெனில், பிரசாத் அவுட் ஆகி இருந்தால் முதலாவது இனிங்ஸ் முடிந்திருக்கும், ஆனால் இந்த bad decision ஆல் லக்ஷ்மனுக்கு மேலும் விளயாடி தனது foam இனை திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. 37ரன்னுடன் போக வேண்டியவர் கடைசியில் 59 ரன்வரை விளையாடியதால் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்.. இப்படிச் சொல்கிறார் steve, இதில் உண்மை இல்லாமலில்லை ஆனால் ஒரு கட்டத்தில் தவறான தீர்ப்பினால் Gillespie யிற்கும் கொடுக்கப்பட வேண்டிய அவுட்டும் கொடுக்கப் படவில்லை என தனது நூலில் Gillespie குறிப்பிடுகிறார். எனவே கிறிக்கற்றில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இயல்பானது.தவிர்க்க முடியாதது. அதைக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது

இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் 171 ரன்கள் மாத்திரமே எடுத்திருந்தது. இதில் லக்ஸ்மன் அதிக ஓட்டங்களான 59 ஓட்டங்களை எடுத்திருந்தார்.ஆஸ்திரேலியர்கள் மிகத்திறமையாக பந்துவீசியிருந்தனர்.அவர்களின் 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து Shane Warne ம் பந்துவீச்சில் கலக்கி இருந்தார்.இவர்களில் Glen Mcrath 14 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுக்கள் எடுத்திருந்தார். இவரின் இந்த 14 ஓவர்களில் 8 Maiden ஓவராகப் போட்டிருந்தது அவரின் பந்து வீச்சின் தரத்தையும் சாணக்கியத்தையும் எடுத்துக் காட்டுகிறதல்லவா???

இந்தியா முதலாவது இனிங்ஸில் சொதப்பி மிகக் குறைவானதும், ஆஸ்திரேலியா எடுத்த ஓட்டங்களின் தொகையை விட 200 ஓட்டங்களுக்கு மேல் குறைவான ஓட்டங்களை எடுத்த படியால் ஸ்டீவ் வோவுக்கு இரண்டு options இருந்தது.
(1) இரண்டாவது இனிங்ஸையும் வழமைபோல் துடுப்பாட்டத்துடன் தொடங்கி மேலும் அதிக ஓட்டங்கள் குவித்து விட்டு, இந்தியாவை தமது ஓட்டங்களுக்கு மேல் எடுக்க பணிப்பது.
(2) இந்தியாவையே மீண்டும் துடுப்பாடச் சொல்லி விட்டு இந்தியா எடுக்கும் ஓட்டங்களை விட ஒரு ஓட்டத்தை அதிகமாக எடுப்பது.இதை Follow on முறை என்று அழைப்பார்கள்.

இந்தியாவை முறைப்படி மீண்டும் துடுப்பாடும் படி Steve அழைத்தார். அவரின் இந்த முடிவைப்பற்றி கிறிக்கற் உலகில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இன்றுவரை வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமேயுள்ளன. ஆனால் Steve Waugh ன் சுயசரிதையின் படி, அந்த முடிவை தனது அணியிலுள்ள எல்லோருடனும் கலந்து பேசிய பின்னர், அவர்களின் விருப்புடனேயே எடுத்ததாக எழுதியுள்ளார். அந்த முடிவு சரியானதென்றே இன்றுவரை உறுதியாகவும் உள்ளார். ஆனால் Gillespie யின் சுயசரிதையின் படி ஸ்டீவின் முடிவை Michkel Slater ( ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்) கடுமையாக எதிர்த்ததாகவும், Mcrath & Heydan உறுதியாக இருந்து அவரின் முடிவுக்கு வலுச்சேர்த்ததாகவும் எழுதுகிறார்.. எது எப்படியோ ஆஸ்திரேலியக் கப்ரனின் அழைப்புக்கு இணங்க இந்தியா Follow on படி தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்சை தொடங்கியது.

ஆஸ்திரேலியாவின் முதல் இனிங்ஸ்ஸின் மொத்த ஓட்டங்களை பெறவே 274 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆளையாள். கேள்விக்குறியுடன் பார்த்த படி இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சென்னையை சேர்ந்த ரமேசும், தாசும் களமிறங்கினர். 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் warneனின் பந்துவீச்சில் ரமேஷ் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இந்தியக் கப்ரன் கங்குலி எடுத்த அதிரடியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கங்குலி கூட , தனது அந்த முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல என்று பல தடவைகள் கூறிவிட்டார். அந்த அதிரடி முடிவு என்னவென்றால் அதுநாள் வரை மூன்றாவதாக களமிறங்கிய ட்ராவிட் என்ற தூணை, நிறுத்திவிட்டு, லக்ஸ்மனை பதிலாக அனுப்பியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் : உலகின் தலை சிறந்த எந்த ஒரு கிறிக்கற் அணியை எடுத்துக்கொண்டாலும், அந்த அணியின் மிகச் சிறந்த வீரனைத்தான் 3வது வீரனாக களம் அனுப்புவார்கள். ஏனெனில் அவர்தான் ஒரு அணியின் முதுகெலும்பு. அணியின் நிலைமைக்கு ஏற்பவும். சூழ்நிலைக்கு ஏற்பவும் உடனுக்குடன் தன்னை தயார் படுத்தக்கூடிய திறமைசாலியாக அவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் முதலாவது ஓவரிலேயே அவுட் ஆகும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அடுத்ததாக களம் இறங்கும் 3ம் இட வீரர் உடனேயே தன்னை ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக மாற்றிக்கொண்டு நிலைமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இது இலகுவான விடயமல்ல. பந்துகளின் அசைவுகளிலேயே (Movements) மாற்றம் இருக்கும் .. அவற்றைப் புரிந்து விளயாட வேண்டும். இதனால் தான் டோனி போன்ற அதிரடி மன்னர்கள் 5ம் 6ம் வீரராக போவதற்கு ஆசைப்படுகிறார்கள். சரி விடயத்துக்கு வருவோம். கங்குலியின் இந்த முடிவுக்கு, முதல் இனிங்ஸில் லக்ஸ்மன் எடுத்த அதிக ஓட்டம் மற்றும் அதிக Boundry அடித்ததை காரணமாகச் சொல்லலாம். இதற்கிடையில் இந்தியா தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் மிகுந்த தன்னம்பிக்கயுடன் தமது 17 வது தொடர்ந்த ரெஸ்ற் வெற்றியுடன் கூடிய சாதனையை கொண்டாடும் முகமாக Partyக் கனவு காணத்தொடங்கி விட்டிருந்தனர். Gil Christ தனது சுய சரிதையில் இப்படி எழுதுகிறார். அன்று காலை நாம் எல்லோரும் உற்சாகத்துடன் காணப்பட்டோம்.. Michael Slater தனது பைக்குள்ளிருந்து ஒரு Cuba சுறுட்டை எடுத்து அதை ரசித்து முகர்ந்துவிட்டு.. ம்ம்ம் இந்த Test வெற்றியை கொண்டாடும் முகமாக, இன்றிரவு உன்னை ஒரு கைபார்க்கிறேன் எனச் சொல்லி சென்றதாக எழுதுகிறார்.

ஆஸ்திரேலியருக்கு நடந்தது என்ன?? லக்ஸ்மன் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவதற்கு பொருத்தமானவர் தானா??? ஆஸ்திரேலியர் தங்களின் சாதனையை முறியடித்தார்களா?? இந்தியா ஆஸ்திரேலியர்களின் தொடர் வெற்றி என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களா??

இந்தியாவின் கொல்கொத்தாவில் உள்ள கிறிக்கற் மைதானத்தின் பெயர் Eden garden. பல வருட பாரம்பரியம் நிறைந்த இந்த மைதானம் ஏறத்தாழ 95000 பார்வையாளர்களை தன்னகத்தே கொள்ளக் கூடியது. வெளிநாட்டு வீரர்களை தனது பாரம் பரியத்தாலும்,பிரமாண்டத்தாலும் மிகவும் கவர்ந்துள்ள இந்த மைதானத்தை இந்தியாவின் லோர்ட்ஸ் என steve waugh தனது புத்தகத்தில் வர்ணித்துள்ளார். இந்த மைதானத்திலே தான் வரலாற்றுச் சிறப்பும், கிறிக்கற் சரித்திரத்தில் மிகச்சிறந்த test match என கணிப்பிடப் பட்டுள்ளதுமான இரண்டாவது போட்டி நடந்தது.
11.3.2001 இல் தொடங்கிய அந்த ரெஸ்ற் போட்டி நூறு வருடங்களுக்கு மேல் விளையாடப்பட்டு வரும் இந்த விளயாட்டின் சித்தாந்தத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியது. புதிதாக உருவாகும் இளம் வீரர்கள், இந்த விளையாட்டை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பல லட்சம் மக்கள் பார்த்த அந்தப்போட்டி, இன்றுவரை பலகோடிப் பேரை கவரக்காரணமானது.. ஸ்ரிவ் வோவ்வின் கனவு பலித்ததா?? ஆஸ்திரேலியா தனது சாதனையை, தானே முறியடித்து அதை southern comfort டுடன் கொண்டாடினார்கள ?? !!! லக்ஸ்மன் அப்படி அங்கு என்ன தான் செய்தான் ??? தொடர்ந்து பார்ப்போம் ( stumps
day 2)

No comments:

Post a Comment