Thursday, 17 January 2013

V.V.S.லக்க்ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம்கிறிக்கற்றின் சித்தாந்தத்தை (Theory) உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் புரியாத புதிர் - 3





11.3.2001 கொல்கொத்தா EDEN GARDENல் 3 வது ரெஸ்ற் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கு அம்பயர்களாக இந்தியாவை சேர்ந்த எஸ்.கே. Pansal இங்கிலாந்தை சேர்ந்த பி.wills சும் பணியாற்றினார்கள். மூம்பாயில் நடந்த முதல் test ல் இந்தியா படு தோல்வியடைந்திருந்தாலும்,EDEN GARDEN ல் கூட்டம் நிரம்பத்தொடங்கியது. கொல்கத்தாவில் கங்குலியின் செல்வாக்கு, STEVE WA
UGH கல்கத்தாவிலுள்ள உதயன் என்ற ஆதரவற்ற அமைப்பின் மேல் காட்டிவந்த பரிவும் உதவிகளும், மற்றும் ஆஸ்திரேலியா 17 வது வெற்றியை பெற்று இந்தியாவில் சாதனையை நிலைநாட்டுவார்களா??? அல்லது இந்திய வீரர்கள் தொடரும் ஆஸ்திரேலியர்களின் சாதனையை முறியடிப்பார்களா?? போன்ற ஆர்வக் கோளாறுகளுடன் , கொல்கத்தா வாசிகளுக்கு இயல்பிலேயே கிறிக்கற்றின் மேலுள்ள வெறித்தனமான காதலையும் இதற்கான காரணங்களாகக் கொள்ளலாம்,

நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடத்தொடங்கியது. இதில் STEVE WAGH 110 ரன்களும், MATHEW HEYDEN 97 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினார்கள். இதில் முக்கியமானது கடைசி விக்கற்றான JASON GILLESPIE STEVE WAUGH வும் கூட்டுச் சேர்ந்து 133 ரன்கள் எடுத்ததுதான். இறுதியில் ஆஸ்திரேலியா எல்லா விக்கட்டுக்களையும் இழந்து 445 ரன்களை எடுத்திருந்தது. உண்மையில் eden gardenல் இந்த எண்ணிக்கையான ரன்களை முதலில் எடுக்கும் அணி அதை வெற்றி எண்ணிக்கை என்றே கொள்வார்கள். இந்தியாவின் பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 7 விக்கட்டுக்களை எடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியர்களின் வேகப் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக விக்கட்டுக்களை இழக்கத்தொடங்கியது. இதில் ஆறாவது வீரனாக களமிறங்கிய லக்ஸ்மன் மட்டும் 122 நிமிடங்கள் விளையாடி 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் விஷேடம் என்னவென்றால் 48 (12@4) ரன்களை boundry யாக அவர் எடுத்திருந்ததுதான். இதைப்பற்றி STEVE WAUGH தனது நூலில் ,இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஆறாவது துடுப்பாட்ட வீரனாக களமிறங்கிய laxman Out of foam மில் இருந்தார்.அந்த வேளையில் இந்திய அணியில் நிரந்தரமான வீரராக இடம்பிடிப்பதற்கு மிகவும் போராடிய லக்ஸ்மனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் test ராக அந்த போட்டி இருந்தது.. லக்ஸ்மன் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சக வீரராகவும் இந்திய அணியின் இறுதி வீரருமாக விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாத் Gillespieயின் ஒரு பந்துக்கு clean L.B.W. ஆனால் அம்பயரின் பிழையான தீர்ப்பால் அவருக்கு அவுட் கொடுபடவில்லை. இதனால் லாபம் அடைந்தவர் லக்ஸ்மனே, ஏனெனில், பிரசாத் அவுட் ஆகி இருந்தால் முதலாவது இனிங்ஸ் முடிந்திருக்கும், ஆனால் இந்த bad decision ஆல் லக்ஷ்மனுக்கு மேலும் விளயாடி தனது foam இனை திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. 37ரன்னுடன் போக வேண்டியவர் கடைசியில் 59 ரன்வரை விளையாடியதால் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்.. இப்படிச் சொல்கிறார் steve, இதில் உண்மை இல்லாமலில்லை ஆனால் ஒரு கட்டத்தில் தவறான தீர்ப்பினால் Gillespie யிற்கும் கொடுக்கப்பட வேண்டிய அவுட்டும் கொடுக்கப் படவில்லை என தனது நூலில் Gillespie குறிப்பிடுகிறார். எனவே கிறிக்கற்றில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இயல்பானது.தவிர்க்க முடியாதது. அதைக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது

இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் 171 ரன்கள் மாத்திரமே எடுத்திருந்தது. இதில் லக்ஸ்மன் அதிக ஓட்டங்களான 59 ஓட்டங்களை எடுத்திருந்தார்.ஆஸ்திரேலியர்கள் மிகத்திறமையாக பந்துவீசியிருந்தனர்.அவர்களின் 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து Shane Warne ம் பந்துவீச்சில் கலக்கி இருந்தார்.இவர்களில் Glen Mcrath 14 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுக்கள் எடுத்திருந்தார். இவரின் இந்த 14 ஓவர்களில் 8 Maiden ஓவராகப் போட்டிருந்தது அவரின் பந்து வீச்சின் தரத்தையும் சாணக்கியத்தையும் எடுத்துக் காட்டுகிறதல்லவா???







Photo: இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளின்  ரெஸ்ற் போட்டிகளின் எதிர்காலம்.

சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு ரெஸ்ற் கிரிக்கெட்  சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்திய அணியை ( சீரீஸ்)  வெற்றி கொண்டது. . கடந்த 28 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்து இந்தியா சென்று ஒரு சீரிஸை வெற்றிகொண்டது சாதாரண விடயமல்ல. கவலைக்குரிய விடயம்.   அதே போல் 

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள  இலங்கை அணி,  மிகச் சாதாரணமாகக் கணிக்கப் பட்ட ஆஸி அணியிடம் படு தோல்விகளைக் கண்டு வருகின்றது.   இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களால் ஒரு இனிங்சில் 10 விக்கட்டுக்களை எடுக்க முடியாது... என்ற துர்ப்பாக்கிய நிலையை காணக் கூடியதாக உள்ளது. ஆஸி அணியின் பந்து வீச்சாளர்களால் இலகுவாக எடுக்கும் ஓட்டங்களுக்கு இணையான ஓட்டங்களை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களால் கூட எடுக்க முடியாத நிலையிலேயே அவர்களின் நிலை காணப் படுகிறது. 

 நாடுகளைப், பிரதிநிதித்துவப் படுத்துவதும், ஒரு நாட்டின் கௌரவம் எனக் கருதப் படுவதுமான சர்வதேசக் கிரிக்கெட் அணிகளின் இந்த அவல நிலைக்கான காரணம் என்ன ??? 

ஆஸி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய இலங்கை அணிகள் திண்டாடுவது ஏன்?? என  அறிய முற்பட்டேன், அப்போது ந்என்னால்   கண்டறியப் பட்ட பல காரணங்களில் முதன்மையானது தற்போதைய  ஆசிய வீரர்களில் பலர் ரெஸ்ற் கிரிக்கெட்டின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும்.. பாரம்பரியமான ரெஸ்ற் கிரிக்கெட் என்ற இந்த அற்புத விளையாட்டை விளையாடும் அழவுக்கு மன உறுதியும், பொறுமையும், திடகாத்திரமும்,, ஓர்மமும் ,வைராக்கியத்தையும் தம்முள்ளே வளர்த்துக் கொள்ளாதவர்கள் என்பதும் புரிந்தது. 

ஒரு ரெஸ்ற் கிரிக்கட்டர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்தியாவின் சச்சின், ட்ராவிட்,  மற்றும் லக்ஷ்மன் மிகப் பெரிய உதாரணங்கள். ஆழுமையும் திறமையும் ஓர்மமும், விடாமுயற்சியும், கொண்ட தன்னம்பிக்கையாளர்கள்.  இவர்களை இப்படி அழைப்பதற்கான காரணம் என்ன???  அதற்கான விளக்கததை பல மாதங்களுக்கு முன்னர் லக்ஷ்மனைப் பற்றி நான் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருந்தேன். தற்போதைய நிலையில், இந்திய இலங்கை அணிகள் ரெஸ்ற் கிரிக்கெட்டில் மண்கவ்விக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களின் இந்த அவல நிலைக்கான காரணத்தை ஓரளவுக்காவது புரிந்து கொள்ள,  எனது அந்தத் தொடர் கட்டுரை உதவக் கூடும். அதனால் அதை மீண்டும்  பதிவிடுகிறேன். 
நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். 


V.V.S.லக்‌ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம் கிறிக்கெட்டின் சித்தாந்தத்தை (Theory)
உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் சிம்ம சொப்பனம் - 1 


2003 -2004ல் இந்திய‌ கிறிக்க‌ற் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டிருந்த‌ கால‌ம், அந்த‌ அண
ியில் ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என்ற‌ ஒரு த‌மிழ‌னும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இட‌ம்பிடித்திருந்தார். அதுவ‌ரை கிறிக்க‌ற்றில் பெரித‌ள‌வான அக்க‌றை இல்லாதிருந்த‌ என‌க்கு, சக‌ த‌மிழனின் விளையாட்டை பார்க்கும் ஆர்வ‌க்கோளாறு ஏற்ப‌ட்டது. அத‌ற்கு ம‌ற்றுமோர் கார‌ண‌ம் இந்த‌ ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என‌து ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ ந‌டிக‌ரும், ந‌ம‌க்கெல்லாம் "த‌ல‌"யுமான‌ க‌வுண்ட‌ம‌ணியின் தீவிர‌ ர‌சிக‌ன் என்ற‌தை வார‌ ச‌ஞ்சிகையொன்றில், அவ‌ரின் பேட்டியின் மூல‌ம் அறிந்திருந்த‌தும் ஆகும். ர‌சிக‌னுக்கு ர‌சிக‌ன் ந‌ண்ப‌ன் என்ற‌த‌ற்க‌மைய‌ அந்த‌ 3 ரெஸ்ற் ம‌ச்சையும் பார்ப்போம் என்று முடிவெடுத்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் பிய‌ருட‌ன் அம‌ர்ந்தேன்.

சனல் 9 என்னும் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கிறிக்கற் சனல் வழமைபோல் போட்டியை ஒளிபரப்பத்தொடங்கியது. இந்தச் சனல் 9 இன் கிறிக்கற் விமர்சகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல.. ரோனி கிறேக்(tony craig), றிச்சி பெனோ,(Richi beno)இயன் சப்பல் (ian chappel), மார்க் ரெய்லர்,(Mark taylor) பில் லோறி,(bill lawry)இயன் ஹீலி (ian healy) ,மார்க் நிக்கிலஸ்,(Mark Nicholas) மைக்கல் ஸ்லேற்றர் (Mikaell Slater) என முன்னாள் கிறிக்கற் வீரர்கள். பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவினதும், இங்கிலாந்தினதும் முன்னாள் கப்ரன்கள் (Captains).இவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒவ்வொரு வீர‌ரைப்பற்றிய‌ க‌ணிப்பும் அச்சொட்டாக‌, நெத்திய‌டியாக‌ இருக்கும். இலேசில் யாரையும் புக‌ழ்ந்தோ, புழுக‌வோ மாட்டார்க‌ள்.. அத‌ற்கான‌ அவசிய‌மும் ,எந்த‌ அழுத்த‌மும் இல்லாத‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்.

போட்டி ஆர‌ம்பித்த‌து என‌க்கோ ஏமாற்றம், கார‌ண‌ம் அந்த‌ போட்டியில் ர‌மேஷ் விள‌யாட‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ ஆகாஷ் சோப்ராவும், ஷேவாக்கும் க‌ள‌மிற‌ங்கினர். மிக‌வும் மெதுவாக‌ ஆர‌ம்பித்த‌ ஆட்ட‌ம் மெதுமெதுவாக‌ ஆஸ்திரேலிய‌ரின் ப‌க்க‌ம் சாய‌த்தொட‌ங்கிய‌து. இந்திய‌ வீர‌ர்க‌ள் அடுத்த‌டுத்து ஆட்ட‌மிழ‌க்க‌த்தொட‌ங்கின‌ர். ட்றாவிட் ,பின் ச‌ச்சின் (0) என‌ ஆட்ட‌மிழ‌ந்து இந்திய‌ அணி சொத‌ப்பிக்கொண்டிருந்த‌போது ஆறாவ‌தாக‌ ஒருவ‌ர் க‌ள‌மிற‌ங்கினார்.அதுவ‌ரை சாத‌ர‌ண‌மாக‌ போய்க்கொண்டிருந்த‌ ரி.வி. வ‌ர்ண‌னை திடீரென்று சூடுபிடிக்க‌த்தொட‌ங்கிய‌து. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ராக‌ புதிதாக‌க் க‌ள‌மிற‌ங்கிய‌வ‌ரை ப‌ற்றியும் அவ‌ரின் ம‌ணிக்க‌ட்டை சு‌ழ‌ற்றி ஆடும் வ‌ல்ல‌மையையும், கிளன்ம‌க்றா( Glen Mcrath) என்ற, உலக துடுப்பாட்ட வீரரையெல்லாம் க‌திக‌ல‌ங்க‌ச் செய்து கொண்டிருந்த அவுஸ்திரேலிய‌ வேக‌ப்ப‌ந்துவீச்சாள‌ரை எந்த‌வித‌ ப‌ய‌முமின்றி நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் லாவ‌க‌த்தைப் ப‌ற்றியும், ஷேன் வார்ன் (Shane warne) என்ற‌ சுழ‌ல்ப‌ந்தின் உச்ச‌ வீர‌னை பிச்சுக்கு உள்ளே வ‌ந்து அடித்தாட‌ப் போகும் ஸ்ரைல‌யும் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டே இருந்தார்க‌ள்.. என‌க்கோ ஒன்றுமே புரிய‌வில்லை, ஒரு வெளி நாட்டு வீர‌னை, அதுவும் த‌ம‌து நாட்டு அணியை எதிர்த்து மோத‌ப் போகின்ற‌வ‌ரைப் ப‌ற்றி இந்த‌ப் பெரிய‌ கிறிக்க‌ற் ஜாம்ப‌வான்க‌ளும், கிறிக்க‌ற்றை க‌ரைத்துக் குடித்த‌ ப‌த்தி எழுத்தாள‌ர்க‌ளும் புக‌ழ்கிறார்க‌ளென்றால் !! இவ‌ர் சாமானிய‌ கிறிக்க‌ற்ற‌ர் அல்ல‌.. இவ‌ர் சாத‌னையாள‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டுமென்ற‌ முடிவுட‌ன் அவ‌ரின் ஆட்ட‌த்தை பார்க்க தொடங்கினேன்.ஏற்கனவே மற்றய பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த இந்தியாவின் மிகச் சிறந்த கப்ரன் கங்குலியுடன் சேர்ந்து,தோல்வியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அணியை அந்தத் தோல்வியிலிருந்து தடுப்பதற்கான தடுப்பாட்டத்தை (defensive) (போராட்டத்தை)நிதானமாக ஆரம்பித்து, அந்தப் ஆடுகளத்தைப் பற்றியும் பந்துவீச்சாளர்களின் அன்றைய தரத்தைப் பற்றியும்,காலநிலைக்கேற்ப பந்தின் அசைவைப் பற்றியும் அறிந்ததும் தடுப்பாட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்துக்கு (Attacking) மாறி, கங்குலியுடன் சேர்ந்து மிகப் பெரும் தோல்வியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார் அந்த வீரன். அவர் தான் வி.வி.எஸ்.லக்ஷ்மன்.

இதில் கங்குலி சிறப்பாக விளயாடி 144 ஓட்டங்கள் எடுத்திருந்த போதும் லக்க்ஷ்மனின் 75 ஓட்ட‌ உறுதுணை இல்லாதிருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. அவரின் அன்றைய ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் ஏனோ தானோ என்றில்லாமல்அந்த ஆட்டத்தின் நெழிவு சுழிவுகளயும், தந்திரோபாயங்களயும் (Tactics) உணரத்தலைப் பட்டேன். லக்ஷ்மன் தனது அணி மிக இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில், எதிரணியினரை,முக்கியமாக ஆஸ்திரேலியரை கதிகலங்க வைக்க‌ எடுக்கும் உத்திகளை (Tactics) பார்த்து
மெய்சிலிர்த்துப்போனேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல,அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக அவரது ஆட்டம் அமைந்திருந்ததை பார்த்த போதுதான் நான் இதுவரை காலமும் நினைத்திருந்த கிறிக்கற் வேறு என்பதும் இந்த அழகான விளயாட்டை உடலால் மட்டுமல்ல மனதாலும் (physically & mentally) விளயாட வேண்டுமென்ற உண்மயையும் உணரத்தொடங்கினேன், கிறிக்கற் சம்பந்தமாக வெளிவந்த புத்தகங்களயும், முக்கியமாக முன்னாள் வீரர்களின் சுயசரிதைகளயும் (autobiographs), அவர்களினதும் அவர்களது கப்ரன்களினதும் தந்திரங்களயும் உள்வாங்கத் தொடங்கி, கிறிக்கற்றின் அதிசயமான வெற்றிகளயும்,அதற்குக் காரணமானவர்களின் உத்திகளயும் படிக்கத் தொடங்கிய போது லக்ஷ்மன் என்ற உண்மைக் கிறிக்கற் வீரனை புரிந்து கொண்டதால் அவரை மதிக்கத் தொடங்கினேன்.

லக்க்ஷ்மன் ஆஸ்திரேலியக் கிறிக்கற் ரசிகர்களிடம் பேரபிமானம் பெற்றவர், கிறிக்கற் அறிவுஜீவிக‌ளினால் மிக‌ச்சிற‌ந்த‌ வீர‌ர் என‌ கௌர‌விக்க‌ப்படுபவர். இவர் எப்ப‌டி ம‌ற்ற‌ய‌ கிறிக்கற் வீரர்களில் இருந்து வித்தியாச‌ப்ப‌டுகிறார்.???

இந்தியா முதலாவது இனிங்ஸில் சொதப்பி மிகக் குறைவானதும், ஆஸ்திரேலியா எடுத்த ஓட்டங்களின் தொகையை விட 200 ஓட்டங்களுக்கு மேல் குறைவான ஓட்டங்களை எடுத்த படியால் ஸ்டீவ் வோவுக்கு இரண்டு options இருந்தது.
(1) இரண்டாவது இனிங்ஸையும் வழமைபோல் துடுப்பாட்டத்துடன் தொடங்கி மேலும் அதிக ஓட்டங்கள் குவித்து விட்டு, இந்தியாவை தமது ஓட்டங்களுக்கு மேல் எடுக்க பணிப்பது.
(2) இந்தியாவையே மீண்டும் துடுப்பாடச் சொல்லி விட்டு இந்தியா எடுக்கும் ஓட்டங்களை விட ஒரு ஓட்டத்தை அதிகமாக எடுப்பது.இதை Follow on முறை என்று அழைப்பார்கள்.

இந்தியாவை முறைப்படி மீண்டும் துடுப்பாடும் படி Steve அழைத்தார். அவரின் இந்த முடிவைப்பற்றி கிறிக்கற் உலகில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இன்றுவரை வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமேயுள்ளன. ஆனால் Steve Waugh ன் சுயசரிதையின் படி, அந்த முடிவை தனது அணியிலுள்ள எல்லோருடனும் கலந்து பேசிய பின்னர், அவர்களின் விருப்புடனேயே எடுத்ததாக எழுதியுள்ளார். அந்த முடிவு சரியானதென்றே இன்றுவரை உறுதியாகவும் உள்ளார். ஆனால் Gillespie யின் சுயசரிதையின் படி ஸ்டீவின் முடிவை Michkel Slater ( ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்) கடுமையாக எதிர்த்ததாகவும், Mcrath & Heydan உறுதியாக இருந்து அவரின் முடிவுக்கு வலுச்சேர்த்ததாகவும் எழுதுகிறார்.. எது எப்படியோ ஆஸ்திரேலியக் கப்ரனின் அழைப்புக்கு இணங்க இந்தியா Follow on படி தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்சை தொடங்கியது.

 

 
ஆஸ்திரேலியாவின் முதல் இனிங்ஸ்ஸின் மொத்த ஓட்டங்களை பெறவே 274 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆளையாள். கேள்விக்குறியுடன் பார்த்த படி இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சென்னையை சேர்ந்த ரமேசும், தாசும் களமிறங்கினர். 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் warneனின் பந்துவீச்சில் ரமேஷ் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இந்தியக் கப்ரன் கங்குலி எடுத்த அதிரடியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கங்குலி கூட , தனது அந்த முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல என்று பல தடவைகள் கூறிவிட்டார். அந்த அதிரடி முடிவு என்னவென்றால் அதுநாள் வரை மூன்றாவதாக களமிறங்கிய ட்ராவிட் என்ற தூணை, நிறுத்திவிட்டு, லக்ஸ்மனை பதிலாக அனுப்பியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் : உலகின் தலை சிறந்த எந்த ஒரு கிறிக்கற் அணியை எடுத்துக்கொண்டாலும், அந்த அணியின் மிகச் சிறந்த வீரனைத்தான் 3வது வீரனாக களம் அனுப்புவார்கள். ஏனெனில் அவர்தான் ஒரு அணியின் முதுகெலும்பு. அணியின் நிலைமைக்கு ஏற்பவும். சூழ்நிலைக்கு ஏற்பவும் உடனுக்குடன் தன்னை தயார் படுத்தக்கூடிய திறமைசாலியாக அவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் முதலாவது ஓவரிலேயே அவுட் ஆகும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அடுத்ததாக களம் இறங்கும் 3ம் இட வீரர் உடனேயே தன்னை ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக மாற்றிக்கொண்டு நிலைமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இது இலகுவான விடயமல்ல. பந்துகளின் அசைவுகளிலேயே (Movements) மாற்றம் இருக்கும் .. அவற்றைப் புரிந்து விளயாட வேண்டும். இதனால் தான் டோனி போன்ற அதிரடி மன்னர்கள் 5ம் 6ம் வீரராக போவதற்கு ஆசைப்படுகிறார்கள். சரி விடயத்துக்கு வருவோம். கங்குலியின் இந்த முடிவுக்கு, முதல் இனிங்ஸில் லக்ஸ்மன் எடுத்த அதிக ஓட்டம் மற்றும் அதிக Boundry அடித்ததை காரணமாகச் சொல்லலாம். இதற்கிடையில் இந்தியா தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் மிகுந்த தன்னம்பிக்கயுடன் தமது 17 வது தொடர்ந்த ரெஸ்ற் வெற்றியுடன் கூடிய சாதனையை கொண்டாடும் முகமாக Partyக் கனவு காணத்தொடங்கி விட்டிருந்தனர். Gil Christ தனது சுய சரிதையில் இப்படி எழுதுகிறார். அன்று காலை நாம் எல்லோரும் உற்சாகத்துடன் காணப்பட்டோம்.. Michael Slater தனது பைக்குள்ளிருந்து ஒரு Cuba சுறுட்டை எடுத்து அதை ரசித்து முகர்ந்துவிட்டு.. ம்ம்ம் இந்த Test வெற்றியை கொண்டாடும் முகமாக, இன்றிரவு உன்னை ஒரு கைபார்க்கிறேன் எனச் சொல்லி சென்றதாக எழுதுகிறார்.

ஆஸ்திரேலியருக்கு நடந்தது என்ன?? லக்ஸ்மன் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவதற்கு பொருத்தமானவர் தானா??? ஆஸ்திரேலியர் தங்களின் சாதனையை முறியடித்தார்களா?? இந்தியா ஆஸ்திரேலியர்களின் தொடர் வெற்றி என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களா??



No comments:

Post a Comment