வெறி -
முகநூல் நண்பரொருவர், தான் சார்ந்த
மதத்தின் பெருமையை கிலாகித்து இன்னொருவர் சொன்ன வாக்கியத்தை share பண்ணியதைப் பார்த்த போது, ஏனோ பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் பல இனங்களுடனும்,, பல மதங்களைத் தழுவுபவர்களுடனும், பல கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இப்படியான பிற்போக்குத்தனமான மனநிலையுடன் உள்ளோரால எப்படி சமாளிக்க முடியும்?? இப்படியான வெறியை ஊட்டும் கருத்துக்களை Time line இல் அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. இவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள்.. ??
சமீபத்தில் பெரியாரின் 131வது பிறந்த நாள் ஆண்டுமலரில், அவரைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது:
"உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திற்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.
தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்ல வனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.
தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந் தபுராணமும்
அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம்
தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை
மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான
பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.
ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.
ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.
தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.
தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.
மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.
ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.
மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.
வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)
மதத்தின் பெருமையை கிலாகித்து இன்னொருவர் சொன்ன வாக்கியத்தை share பண்ணியதைப் பார்த்த போது, ஏனோ பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் பல இனங்களுடனும்,, பல மதங்களைத் தழுவுபவர்களுடனும், பல கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இப்படியான பிற்போக்குத்தனமான மனநிலையுடன் உள்ளோரால எப்படி சமாளிக்க முடியும்?? இப்படியான வெறியை ஊட்டும் கருத்துக்களை Time line இல் அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. இவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள்.. ??
சமீபத்தில் பெரியாரின் 131வது பிறந்த நாள் ஆண்டுமலரில், அவரைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது:
"உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திற்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.
தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்ல
தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்
ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.
ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.
தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.
தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.
மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.
ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.
மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.
வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)
இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.
அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல
அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்" இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.
மனிதனுக்கு, தான் சார்ந்த மொழியிலும்,மதத்திலும் பற்று இருக்க வேண்டும் ஆனால் அது வெறியாக இருக்கக் கூடாது.. அது ஆபத்தானது. வெறி-
அது மதத்தில் இருந்தாலும், மொழியில் இருந்தாலும், இனத்தில் இருந்தாலும், அல்லது சாதியென்று இருந்தாலும் அது காட்டுமிராண்டித்தனமே.
கல்வியிலும், நாகரீகத்திலும் மிக..மிக வளர்ந்து எங்கோ போய்விட்ட இந்த உலகில் கிணத்துத்தவளைகளாக, உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர விரும்பாதவர்கள் இன்னும் தமது சுயலாப , பொருளாதார வளர்ச்சிக்காக தம்மிடம் உள்ள பேச்சுத்திறமையால் இப்படியான வெறிகளை அப்பாவி மக்களிடத்திலும், முக்கியமாக கல்வியறிவில் பின் தங்கியுள்ளவர்களித்திலும் வளர்த்துக் குளிர்காய்கிறார்கள்.
முகநூல் நண்பர்கள் சிலர் மத வெறியர்களினதும் மொழிவெறியர்களினதும், இனவெறியர்களினதும் கருத்துக்கள் என்று சிலவற்றை Share பண்ணும் போது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் பண்ணுகிறார்களா???
உலகின் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மதமும், மொழியும் தான். மனிதர்களுக்கிடையில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்குத் தோன்றியதுதான் மதங்கள்.அது எந்த மதமாக இருந்தாலும் நற்பண்பை போதித்தால் அது நல்ல மதமே.
அவனுக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்த உருவானதுதான் மொழி. அது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அது இங்கிலாந்தில் ஆங்கிலமாகவும் ஜேர்மனியில் ஜேர்மனாகவும் இருக்கிறது.. அவ்வளவே. ஒருவரின் உள்ளக்கிடக்கையை மற்றவர் புரிவதற்கு உதவும் எந்த மொழியும் சமமானதே. மக்களும் சமமானவர்களே. இதில் உயர்வு தாழ்வு எப்படி ஏற்பட்டது??
நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மதங்கள், மொழிகளில் வெறிகொண்டு மனிதர்கள் தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.முக்கியமாக கல்வியறிவில் பின்தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளில் இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. காரணம், ஒவ்வொருவரும் தமது மதம், மொழிதான் சிறந்தது என்றும் மற்றயோர்களது தாழ்ந்தது என்றும் எண்ணும் எண்ணம் தான். இதனால்தான் கம்யூனிசத்தின் தந்தை லெனின் மதபோதகர்களை இல்லாமல் செய்தார்.
மக்களிடத்தில் மூட நம்பிக்கையை வளர்த்து, அவர்களை சோம்பேறிகளாக்கி, அதன் மூலம் உழைப்பில் நம்பிக்கையை இழக்க வைப்பவர்களான மத போதகர்களின் அழிவு, மக்களை, கடவுள் பார்த்துக் கொள்ளுவார் தானே என்ற மூட நம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவித்து, தன்னம்பிக்கையுடன் உழைக்கவைத்தது. இது வங்குரோத்தாகப் போயிருந்த ரஷ்யா என்றொரு நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிக வேகமாக வளர்வதற்கு வழிவகுக்க பெரிதும் உதவிய்தென்றால் அது மிகையல்ல..
ஒருவன் ஆத்திகனாகவோ, நாத்திகனாவோ இருக்கலாம் அது அனின் தனிப்பட்ட விருப்பு. சுதந்திரம். ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் , அவரவர்களின் மதமும் மொழியும் முக்கியமானது. இதை நாம் மதிக்க வேண்டும். உலகம் எங்கேயோ போய்விட்டது. எனவே வளர்ச்சியடைந்த உலகத்தில் ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்று சிந்த்தித்து வாழ முற்பட்டால் எல்லா நாட்டிலும் , எல்லா இன,மொழி பேசும் மக்களுடனும் அன்புடனும், சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் நிம்மதியாக வாழலாம்.
அதை விடுத்து எனது மதந்தான் சிறந்தது என்றும், எனது மொழிதான் சிறந்தது என்றும் மதத்தையும், மொழியையும் முன்னிறுத்தினால் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்தும், பயந்தும், நிமதியின்றியும் வாழவேண்டியதுதான். இது தேவையா??? மத, மொழிக் கடும் போக்காளர்களை ஆதரிப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல
அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்" இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.
மனிதனுக்கு, தான் சார்ந்த மொழியிலும்,மதத்திலும் பற்று இருக்க வேண்டும் ஆனால் அது வெறியாக இருக்கக் கூடாது.. அது ஆபத்தானது. வெறி-
அது மதத்தில் இருந்தாலும், மொழியில் இருந்தாலும், இனத்தில் இருந்தாலும், அல்லது சாதியென்று இருந்தாலும் அது காட்டுமிராண்டித்தனமே.
கல்வியிலும், நாகரீகத்திலும் மிக..மிக வளர்ந்து எங்கோ போய்விட்ட இந்த உலகில் கிணத்துத்தவளைகளாக, உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர விரும்பாதவர்கள் இன்னும் தமது சுயலாப , பொருளாதார வளர்ச்சிக்காக தம்மிடம் உள்ள பேச்சுத்திறமையால் இப்படியான வெறிகளை அப்பாவி மக்களிடத்திலும், முக்கியமாக கல்வியறிவில் பின் தங்கியுள்ளவர்களித்திலும் வளர்த்துக் குளிர்காய்கிறார்கள்.
முகநூல் நண்பர்கள் சிலர் மத வெறியர்களினதும் மொழிவெறியர்களினதும், இனவெறியர்களினதும் கருத்துக்கள் என்று சிலவற்றை Share பண்ணும் போது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் பண்ணுகிறார்களா???
உலகின் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மதமும், மொழியும் தான். மனிதர்களுக்கிடையில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்குத் தோன்றியதுதான் மதங்கள்.அது எந்த மதமாக இருந்தாலும் நற்பண்பை போதித்தால் அது நல்ல மதமே.
அவனுக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்த உருவானதுதான் மொழி. அது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அது இங்கிலாந்தில் ஆங்கிலமாகவும் ஜேர்மனியில் ஜேர்மனாகவும் இருக்கிறது.. அவ்வளவே. ஒருவரின் உள்ளக்கிடக்கையை மற்றவர் புரிவதற்கு உதவும் எந்த மொழியும் சமமானதே. மக்களும் சமமானவர்களே. இதில் உயர்வு தாழ்வு எப்படி ஏற்பட்டது??
நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மதங்கள், மொழிகளில் வெறிகொண்டு மனிதர்கள் தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.முக்கியமாக கல்வியறிவில் பின்தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளில் இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. காரணம், ஒவ்வொருவரும் தமது மதம், மொழிதான் சிறந்தது என்றும் மற்றயோர்களது தாழ்ந்தது என்றும் எண்ணும் எண்ணம் தான். இதனால்தான் கம்யூனிசத்தின் தந்தை லெனின் மதபோதகர்களை இல்லாமல் செய்தார்.
மக்களிடத்தில் மூட நம்பிக்கையை வளர்த்து, அவர்களை சோம்பேறிகளாக்கி, அதன் மூலம் உழைப்பில் நம்பிக்கையை இழக்க வைப்பவர்களான மத போதகர்களின் அழிவு, மக்களை, கடவுள் பார்த்துக் கொள்ளுவார் தானே என்ற மூட நம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவித்து, தன்னம்பிக்கையுடன் உழைக்கவைத்தது. இது வங்குரோத்தாகப் போயிருந்த ரஷ்யா என்றொரு நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிக வேகமாக வளர்வதற்கு வழிவகுக்க பெரிதும் உதவிய்தென்றால் அது மிகையல்ல..
ஒருவன் ஆத்திகனாகவோ, நாத்திகனாவோ இருக்கலாம் அது அனின் தனிப்பட்ட விருப்பு. சுதந்திரம். ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் , அவரவர்களின் மதமும் மொழியும் முக்கியமானது. இதை நாம் மதிக்க வேண்டும். உலகம் எங்கேயோ போய்விட்டது. எனவே வளர்ச்சியடைந்த உலகத்தில் ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்று சிந்த்தித்து வாழ முற்பட்டால் எல்லா நாட்டிலும் , எல்லா இன,மொழி பேசும் மக்களுடனும் அன்புடனும், சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் நிம்மதியாக வாழலாம்.
அதை விடுத்து எனது மதந்தான் சிறந்தது என்றும், எனது மொழிதான் சிறந்தது என்றும் மதத்தையும், மொழியையும் முன்னிறுத்தினால் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்தும், பயந்தும், நிமதியின்றியும் வாழவேண்டியதுதான். இது தேவையா??? மத, மொழிக் கடும் போக்காளர்களை ஆதரிப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.


No comments:
Post a Comment